ராமநாதபுரம், அக்.23-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படியும் டாக்டர் G. விஜயகுமார் நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத் துறை அவர்களின் வழிகாட்டுதலின் படியும் கு.லிங்கவேல், ராமேஸ்வரம் நகராட்சி மற்றும் மண்டபம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலரால் இன்று ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ பருவத வர்த்திணியம்மன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக அயோடின் பற்றாக்குறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு அயோடின் குறைபாட்டால் உடலுக்கு ஏற்படும் விளைவுகள் , அயோடின் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளவும், அயோடின் என்ற நுண் சத்தினால் உடலுக்கு ஏற்படும் அளப்பரிய நன்மைகள் பற்றியும், கடையில் விற்கப்படும் உப்பு பாக்கெட்டுகளில் அயோடின் சேர்க்கப்பட்ட உணவினை எவ்வாறு விழிப்புணர்வுடன் வாங்கி பயன்படுத்த வேண்டும் , வீட்டில் உள்ள உப்பில் ஐயோடின் இருக்கிறதா? இல்லையா? என்பதை பற்றி கண்டறியும் எளிய முறைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள்,மாணவிகள், ராமேஸ்வரம் நகராட்சி துப்புரவு அலுவலர் திரு சங்கரலிங்கம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மாணவிகளுக்கு எதிர்வரும் பண்டிகை காலங்களில் அதிக சேர்க்க வண்ணம் சேர்க்கப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம் எனவும் தங்கள் வாங்கும் உணவுப் பொருட்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் உணவு பாதுகாப்பு துறையின்
9444042322 என்ற எண்ணிலும் unavupukar@gmail.com என்ற இமெயிலிலும் புகார் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.