நாகர்கோவில் பிப் 21
உரிமை கரங்கள் ஒட்டுநர் தொழிற்சங்க கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகர் ஆகியோருக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:-
உரிய அனுமதி இல்லாமல் கேரள பதிவன் கொண்ட சுற்றுலா பேருந்தை கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அகற்ற வேண்டும் இதனால் தமிழ்நாடு சுற்றுலா வேன் ஓட்டுனரின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. கேரளா பதிவு எண் கொண்ட வாகனங்கள் தமிழ்நாடு அரசுக்கு கட்ட வேண்டிய வரிகளை முறையாக கட்டாமல் திருட்டுத்தனமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் வந்து சவாரிகளை ஏற்றி செல்கிறார்கள். இதனை ஏன் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் கவனிக்காமல் இருக்கிறனர் என்பது தெரியவில்லை. இது குறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுபோல் போனால் கண்டிப்பாக எங்களுடைய போராட்டங்களை நாங்கள் கையில் எடுக்க வேண்டியதாயிருக்கும் என்பதை முதல் கட்டமாக அறிவிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.