சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்களின் ஆலோசனையின்
பேரில் காளையார்கோவில் பேரூர்க்கழக திமுக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி காளையார்கோவிலில் உள்ள இயேசுவனம் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் அறுசுவை அசைவ உணவு பரிமாறப்பட்டது.இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் காளையார்கோவில் கிளைக்கழக செயலாளர் ஆர். வி. எஸ். அரங்கநாதன் , மகளிரணி எஸ்தர் மேரி,
ஜான் சந்தியாகு, தினேஷ் அரசு, சி. முத்து, சதாம், ஆர். எம். எல். கருணாநிதி, தாமோதரன், லிங்கநாதன், சூசைமாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை காளையார்கோவில் கிளைக்கழக செயலாளர் ஆர். வி. எஸ். அரங்கநாதன் சிறப்பாக செய்திருந்தார்.