நாகர்கோவில் டிச 13
பயிற்சி மற்றும் குடியியல் மருத்துவர்களுக்கு குறித்த நேரத்தில் ஊக்கத்தொகை வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்தார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் குடியியல் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாமல் அந்த நிறுவனங்கள் ஏமாற்றி வருகிறது. மேலும் இந்த தொகை குறித்த நேரத்தில் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.
இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் நடத்திய கருத்தெடுப்பில் 27 சதவீத முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்றும் தனியார் கல்லூரிகளில் 54 சதவீத மாணவர்களுக்கு அரசு வழங்குவதை விட குறைவான ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இவற்றை நிவர்த்தி செய்ய தக்க நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். குரல் எழுப்பியுள்ளார்.



