நாகர்கோவில் செப் 17
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பரத்தில் பேருந்து நிறுத்தத்தில் 2 பெண்கள் கை காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்தை வாலிபர்கள் துரத்தி சென்று பேருந்தை வழிமறித்து ஒட்டுனருக்கு தவறை சுட்டி காட்டி அறிவுரை வழங்கிய வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தின தமிழ் நாளிதழ் செய்தியாக வெளியிட்டு இருந்தது. தற்போது தின தமிழ் செய்தி எதிரொலியாக
அரசு பேருந்து ஒட்டுனர் ஸ்டீபன், நடத்துனர் மணிகண்டன் ஆகிய இருவரையும் நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளார். பேருந்து நிறுத்தத்தில் இருந்த இரு பெண்கள் கையை காட்டி பேருந்தை நிறுத்த சொல்லியும் நிற்காமல் சென்றதால் அப்பகுதி இளைஞர்கள் பேருந்தை விரட்டி சென்று ஓட்டுனரின் தவறை எடுத்துரைத்து அதை வீடியோவாக வெளியிட்டு நடவடிக்கை எடுக்க கோரி இருந்தனர். எனவே இந்த சம்பவம் தின தமிழ் நாளிதழில் செய்தியாக வெளிவந்திருந்தது. இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் மீது போக்குவரத்து கழக மேலாளர் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்ததால் மற்ற பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அச்சத்தில் உள்ளனர்.