தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பில் அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது. தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கை தர மேம்பாட்டிற்கும் எண்ணற்ற பல திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. துறை அலுவலர்கள் அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களுக்கான வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டு அத்தகைய திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். மேலும் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம், மாநில நிதிக்குழு மானியத் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசின் பல்வேறு திட்டங்களின் செயலாக்கம், முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்கள் எடுத்துரைக்கப்பட்ட விவரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படாமல் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் அதற்குரிய தீர்வையும் கண்டறிந்து திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, திட்ட இயக்குனர் லலிதா, இணை இயக்குனர் சாந்தி, ஆவின் பொது மேலாளர் மாலதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சையது ழுகைதீன் இப்ராகிம் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பில் அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics