தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஆணைய சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் (CSR FUND) கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப் படவுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி, முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் (பொ) சுரேஷ் பாபு அவர்கள் மற்றும் துறைத் தலைவர்கள், துறைமுக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.



