தஞ்சாவூர். நவ.19.
மத்திய அரசு பல்வேறு வகையிலும் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிறது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ..வாசுகி.
தஞ்சாவூர் ந.மு.வெங்கடசாமி நாடார் திருவருள் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி நிறுவனர் பேராசிரியர் விருத்தாச்சலனார் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கத்தில்நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்லூரி மேலாண்மை அறங்காவலர் இளமுருகன் தலைமை தாங்கினார் தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் ச. முரசொலி நினைவேந்தல் உரையாற்றினார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் மருது துரை கருத்துரை யாற்றினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேசுகையில்:
மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதால் மாநில உரிமைகள் பாதிக்கப்படு கின்றன .எனவே மாநில உரிமைகளை பாதுகாக்கும் விஷயத்தில் நாம் கவனமாக செயல்பட வேண்டும் .நாடாளு மன்றத்தில் எவ்வி விவாதமும் நடத்தப்படாமல் தேசிய கல்விக் கொள்கையை நிறைவேற்றப் பட்டது .குலக்கல்வி முறையை கொல்லை புறம் வழியாக திணிக்கும் உத்தியாகவே தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வரப்பட்டுள்ளது .இதேபோல விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதும் , கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
அரசியல் வேறு ,மதம் வேறு, அரசியலில் மதமும் ,மதத்தில் அரசியலும் கலக்கக்கூடாது என்பதே மதசார்பின்மை. அதாவது ஆளுகின்ற அரசுக்கு மதம் இருக்கக்கூடாது .ஆனால் பிரதமரின் செயல்பாடு நமது மத சார்பின்மைக் கோட்பாட்டுக்கு எதிராக உள்ளது .அரசியலமைப்பு சட்டப்படி 22 மொழிகளிலும் சமமான அந்தஸ்து வழங்க வேண்டும் .ஆனால் அதை விடுத்து இந்தி திணிப்பில் மத்திய அரசு ஈடுபடுகிறது .பாலின சமத்துவ சட்டத்தில் இருந்தாலும் அது நடைமுறையில் இல்லை சிறுபான்மை மக்கள் பாகுபாட்டு டன் நடத்தப்படுகின்றனர். எனவே இந்த காலகட்ட மிகவும் அபாயகர மானதாக இருப்பதால் இதை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றார் வாசுகி.
முன்னதாக கல்லூரி ஆட்சி குழு செயலர் கலியபெருமாள் அனைவரையும் வரவேற்றார் நிறைவாக கல்லூரி முதல்வர் இரா தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்