வாசுதேவநல்லூர்& சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்களை ராஜா எம்எல்ஏ அறிமுகம் செய்து வைத்தார்
சங்கரன்கோவில்.அக்.12
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நடந்தது கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு ,யூஎஸ்டி சீனிவாசன் ,பரமகுரு, மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜதுரை ,மனோகரன் மாவட்ட பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் மற்றும் வாசுதேவநல்லூர் தொகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முன்னாள் எம்பி தனுஷ் எம் குமார் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினார். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள்ஒன்றிய செயலாளர் லாலாசங்கரபாண்டியன், பொன்முத்தையாபாண்டியன், கடற்கரை உள்பட புளியங்குடி நகர செயலாளர் அந்தோணி சாமி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சையா, மாவட்ட மகளிர் அணி தலைவர் அன்புமணி கணேசன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆர் சரவணன், ராஜ் வக்கீல் அணி காளிராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.