சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆலோசனை ப்படி சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து மாரிச்சாமி தலைமை யில் ராஜபாளையம் சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு மஞ்சப்பை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது நிகழ்வில் தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்



