அரியலூர்,ஆக;24
அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
இங்கு 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அங்குள்ள கணினி ஆய்வகத்தில் இருந்த கணினி வெடித்ததில் கரும்புகை ஏற்பட்டு இன்று மாணவ – மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பக்கத்தில் இருந்த அறைகளுக்கும் கரும்புகை பரவியதால் அங்கிருந்த பள்ளி மாணவ – மாணவிகளுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சுமார் 26 மாணவ – மாணவிகள் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அறிந்த மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்