மதுரை ஆகஸ்ட் 29,
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் காவல் ஆணையர் மற்றும் ஆட்சியர் திடீர் ஆய்வு.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலையத்தை காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு நடத்தினார்கள். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலையத்தில் இரவில் திடீர் விசிட் செய்த மாநகர காவல் ஆணையர் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் ரோந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அரசு மருத்துவமனையில் இருட்டாக உள்ள பகுதிகள் மற்றும் பாதுகாப்பு தேவைகள் குறித்த விபரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். உடன் காவல் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் இருந்தனர்.



