கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகத்தில் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் இயற்கை உரங்களை காட்சி படுத்தினார்கள்.இதில் மாணவர்கள் விவசாயிகளுக்கு இயற்கை உரங்களின் முக்கியதுவத்தையும் அதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் விளக்கினார்கள். இதில் திரவ உயிர் உரம் ரைசோபியம், அசோலா, பாஸ்போபேக்டீரியா, டிரைக்கோடர்மா விரிடி , அசோஸ்பைரில்லம், சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ், பெசிலஸ், நுண்ணுயிர் உரம் மற்றும் புண்ணாக்கு வகைகளான ஆமணக்கு, வேப்பங்கொட்டை, புங்கம், எள்ளு போன்ற புண்ணாக்கு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
இதில் எராளமான விவசாயிகள் கலந்து கொண்டு இயற்கை உரங்களின் முக்கியதுவத்தை கேட்டறிந்தனர். மேலும் இந்த நிகழ்வில் துணை இயக்குநர் முனைவர் திரு.இரா. கருப்பையா கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இயற்கை உரங்களின் முக்கியதுவத்தை பற்றி கூறினார்.



