By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காளையார் கோவில் வட்ட அளவில் ரூ.01.80 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > காளையார் கோவில் வட்ட அளவில் ரூ.01.80 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
அரசியல்சிவகங்கைமாவட்டம்

காளையார் கோவில் வட்ட அளவில் ரூ.01.80 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி

Last updated: April 22, 2025 12:38 pm
April 22, 2025 9 Views
Share
SHARE

சிவகங்கை:20
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்,
காளையார் கோவில் வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, தகுதியுடைய 99 பயனாளிகளுக்கு ரூ.01.80 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், காளையார்கோவில் வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில், அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணுகின்ற அரசு இயந்திரம் களத்திற்கு வரும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வுகளில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவது உறுதி செய்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மாதந்தோறும் வட்ட அளவிலான முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இம்மாதத்திற்கு காளையார்கோவில் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த பல்வேறு திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாக,  முதன்மை அலுவலர்களும் தங்களது துறை ரீதியாக வட்டளவில் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகள் மேற்கொண்டும்,
பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெற்றும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்,  காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட தனியார் மஹாலில் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியின் வாயிலாகவும்,  பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களும் பெறப்படவுள்ளது. முன்னதாக, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய பயன்களை வழங்கிடும் பொருட்டு, நலத்திட்ட உதவிகளும் பயனாளிகளுக்கு இந்நிகழ்ச்சியின் வாயிலாக வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, மேலும் இன்றையதினம் காளையார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட அன்னே இல்லம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாணவ மாணவியர் விடுதி ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்தும், ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் பால் கொள்முதல் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேபோன்று, நாட்டரசன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழ்நாடு முதலமைச்சர் , அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்டு, பெறப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பாக, தகுதியுடைய பயனாளிகளுக்கு உரிய பயன்கள் உடனடியாக வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுபோன்று, பிரதி மாதம்தோறும் மாவட்டத்தில் ஒரு வட்ட அளவில் நடைபெறவிருக்கும், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

மேலும், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், காளையார்கோவில்
ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பருத்திக்கண்மாய் ஊராட்சி பகுதியில் வேளாண்மைத்துறையின் சார்பில் 2 ஏக்கர் பரப்பளவில் விதைப்பண்ணை (பயிர் உளுந்து) அமைத்து பயன்பெற்று வரும் விவசாயிடம் பயன்கள் குறித்து கேட்டறிந்தும், மறவமங்கலம் ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், பொது சுகாதாரத்துறையின் சார்பில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பரிசோதனை மையத்துடன் கூடிய வட்டார சுகாதார அலகு கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களின் வருகை, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் இருப்பு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மேம்படுத்த வேண்டிய வசதிகள் ஆகியன குறித்தும், சிரமம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பிரதம மந்திரி கிராமிய வீடு கட்டும் திட்டம் 2024-25ன் கீழ் தலா ரூ.02.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயனாளிகளின் இல்ல கட்டுமான பணிகள் குறித்தும், அதே ஊராட்சி பகுதியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் இளையான்குடி – மறவமங்கலம் சாலை முதல் கள்ளிவயல் சேம்பார் சாலை வரை ரூ.665.11 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் ஆகியன குறித்தும்,
வேளாரேந்தல் ஊராட்சி பகுதியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் சாயல்குடி சாலை முதல் வேலாரேந்தல் (வழி) மாரந்தை, கோடிக்கரை வரை ரூ.624.52 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்தும், அதே பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவைகள் குறித்தும், தேசிய கிராம சுயாட்சி பிரச்சார திட்டம் 2024-25ன் கீழ் ரூ.05.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் குறித்தும், வேளாரேந்தல் ஊராட்சிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் ஆகியன குறித்தும்,

மரகத்தூர் ஊராட்சி பகுதியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் காளையார்கோவில் நூர்த்திநைனார் கோவில் சாலை முதல் உருவாட்டி அம்மன் கோவில் சாலை (வழி)காயாஓடை, வளனை சாலை வரை ரூ.852.16 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்தும்,
ஏ.வேலாங்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2022-23ன் கீழ் செயல்பட்டு வரும் வட்டார நாற்றாங்கால் பண்ணையின் செயல்பாடுகள் குறித்தும், அதே பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவைகள் குறித்தும்,
மரகத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையின் வாயிலாக குடிமைப்பொருட்கள் பெறப்படும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிமைப்பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், அதே ஊராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவைகள் குறித்தும், ஏ.வேலாங்குளம் ஊராட்சி பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பயன்பாடுகள் ஆகியன குறித்து மகளிர் சுயஉதவி குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடியும், ஏ.வேலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் முறை மற்றும் மாணாக்கர்களின் கற்றல் திறன் ஆகியன குறித்தும், நல்லனேந்தல் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய சூரியசக்தி மின்விசை மோட்டார் அமைத்து பயனடைந்து வரும் விவசாயிடம், பயன்கள் குறித்து கேட்டறிந்தும்,
காளையார்கோவில் வட்டார அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் வருகை, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் இருப்பு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மேம்படுத்த வேண்டிய வசதிகள் ஆகியன குறித்தும், காளையார்கோவில் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2018-2019ன் கீழ் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்று நாற்றாங்கால் பண்ணையின் செயல்பாடுகள் குறித்தும், என்.என்.178,சூசையப்பர்பட்டணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தில், மருந்துகளின் இருப்பு, விற்பனை மற்றும் தரம் ஆகியன குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர்
மேலாண்மை துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.3,30,000/- மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளையும், 11 பயனாளிகளுக்கு ரூ.3,30,000/- மதிப்பீட்டிலான இ-பட்டாக்கான ஆணைகளையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு ரூ.10,500/- மதிப்பீட்டிலான திருமண உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு நிவாரணத்தொகை ஆகியவைகளுக்கான ஆனைகளையும், தனிவட்டாட்சியர் (மனை வாடகை பரிவு) ன் கீழ் 02 பயானிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 05 விவசாயிகளுக்கு ரூ.2,680/- மதிப்பீட்டிலான வேளாண் இடுபொருட்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 04 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,39,642/- மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்களையும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 43 பயனாளிகளுக்கு ரூ.1,50,50,000/-மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணைகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.7,15,000/- மதிப்பீட்டிலான பயிர் கடனுதவிக்கான ஆணைகளையும், மகளிர் திட்டத்தின் சார்பில் 10 மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு மொத்தம் ரூ.15,00,000/- மதிப்பீட்டிலான சமுதாய முதலீட்டு நிதியுதவிக்கான ஆணைகளையும் என ஆக மொத்தம் 99 பயனாளிகளுக்கு ரூ.1,80,77,822 கோடி  மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கா.வானதி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்திகேயன், காளையார்கோவில் வட்டாட்சியர் முபாரக், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குலசேகரத்தில் கழிவுகளை ஏற்றி வாகனத்தை

January 12, 2025 10 Views
அரசு பள்ளி சத்துணவு ரேஷன் அரிசி கடத்தல்
பள்ளிகளில் நகராட்சி ஆய்வாளர்கள் ஆய்வு
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக மகளிர் தின விழா
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?