கன்னியாகுமரி செப் 24
கன்னியாகுமரி மாவட்ட அளவிலான தமிழக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2024 ல் அஞ்சுகிராமத்தை அடுத்த பால்குளத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதலாமாண்டு ஆங்கிலம் பயிலும் மாணவி தனுஷா 100 மீ ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் இரண்டிலும் தங்கப்பதக்கம் வென்றார். இரண்டாமாண்டு ஆங்கிலம் பயிலும் மாணவி சண்முக பிரியா சிலம்பம் போட்டியில் மூன்றாம் பரிசும், இரண்டாமாண்டு வணிக மேலாண்மை பயிலும் மாணவிகள் சுஜா மற்றும் கிருத்திகா கேரம் விளையாட்டில் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
இரண்டாமாண்டு கணிதம் பயிலும் மாணவர் முத்துக்குமரன் நீச்சல் போட்டியில் முதல் பரிசு வென்றார். மேலும் கல்லூரி அலுவலக பணியாளர் அசோக் 3000 மீ ஓட்டத்தில் மூன்றாம் பரிசு வென்றார்.
விளையாட்டில் வெற்றி பெற்றவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் சரோஜா, உடற்கல்வி இயக்குனர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்தி பாராட்டினர்.