தஞ்சாவூர் மார்ச்.25.
கள்ளப்பெரம்பூர் அரசுமேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு முதலமைச் சரின் பிறந்தநாள் முன்னிட்டு திமுக மருத்துவரணி மற்றும் தஞ்சை மேற்கு ஒன்றிய திமுக சார்பில், மருத்துவமுகாம் நடைபெற்றது.
முகாமில் மாநில மருத்துவர் அணி செயளாலர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் வசந்தகுமார், திருவையாறு தொகுதி அமைப்பாளர் மருத்துவர்
அரவிந்தன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
முகாமை தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி து.செல்வம், ஒன்றிய செயலாளர் உலகநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உதயன், ஒன்றிய கவுன்சிலர் ஜோதி, ரெங்கராஜ் , ரவி , தமிழழகன் ,சம்பத் ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாமி, ரமேஷ், அம்பிகாபதி, ராஜேந்திரன் துணை அமைப்பாளர் டாக்டர்.சதிஷ், .சுரேஷ், பேட்டன் ராஜ், தொகுதி அமைப்பாளர்கள் விக்னேஷ்,துணை அமைப்பாளர் விஜய் குமார் ,பிரகாஷ் , திருச்செல்வி, காயத்திரி,சங்கீதா கலந்து கொண்டனர்