கிருஷ்ணகிரி,ஜுலை.30-கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மகாதேவ கொல்லஹள்ளி, தொகரப்பள்ளி, பெருகோப்பனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் பெருகோப்பனப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெருகோப்பனப்பள்ளி, ஊராட்சி மன்ற தலைவர் முரளி, தொகரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் உமா லட்சுமி பிரபு, மகாதேவ கொள்ளஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பழனி ஆகியோர் முன்னிலையில் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, வட்டாட்சியர் திருமுருகன் ஆகியோ கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சான்றிதழ்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்தல், எரிசக்தி துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், காவல்துறை, தொழிலாளர் நல வாரியம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை பதிவு செய்தல் கால்நடை பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் நலத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு பதிவு செய்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஜெகதேவி ஊராட்சி செயலாளர் செங்கதிர் செல்வன், மற்றும் சுலோக்சனா, சேகர், முருகேசன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்செய்திருந்தனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை பதிவேற்றம் செய்தனர்.



