பஸ்ம குளத்தில் ஐயப்பன் ஆராட்டு நிகழ்ச்சி
ராமநாதபுரம், டிச.27-
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மேள தாளங்கள் முழங்க ,குதிரை நடனம் ஆட, பக்தர்களின் சுவாமியே சரணம் ஐயப்பா… சரண கோஷம் விண்ணை முட்ட மண்டல பூஜை விழா கோலாகலம் ஆக நடைபெற்றது.
தென் தமிழகத்தின் சபரிமலை என்று அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த 17 ம் தேதி கொடி ஏற்றம் நடைபெற்றது. மண்டல பூஜை அபிஷேகத்திற்கு பக்தர்கள் விரதம் இருந்து ராமநாதபுரத்தில் இருந்து நெய் சுமந்து கொண்டு பாதயாத்திரையாக சென்று கோயிலில் குருசாமி இடம் வழங்கினர். மண்டல பூஜை நிகழ்ச்சியான பேட்டை துள்ளல் மற்றும் ஆராட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மண்டல பூஜையில் முக்கிய நிகழ்ச்சியில் அதிகாலை
4 மணிக்கு கோ பூஜையும், 4:30 மணிக்கு பள்ளி உணர்த்துதல், மற்றும் வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க ஶ்ரீ மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொஙகாலை 8 மணிக்கு ஐயப்ப பக்தர்கள் ரெகுநாதபுரம் கோயிலில் இருந்து உடம்பில் வண்ணபொடியை பூசி கொண்டு ஆடி பாடி சரண கோஷம் எழப்ப மேள தாளங்கள் முழங்க முன்னே குதிரை நடனம் ஆட ஐயப்பன் ஆலயத்திற்கு பேட்டை துள்ளி ஊர்வலமாக வந்த நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேல் ஐயப்பன் ஆலயத்தின் பின்புறம் உள்ள பஸ்ம குளத்தில் கோயில் தலைமை குருசாமி மோகன் தலைமையில் ஐயப்பன் சுவாமி ஆராட்டு விழா ஐயப்பன் பக்தர்களின் சுவாமியே சரணம் ஐயப்பா கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு எழும்ப வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதன் பின்னர் கொடி இறக்கம் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை
தலைமை குருசாமி மோகன் தலைமையில் ஶ்ரீ வல்லபை ஐயப்பா சேவை நிலையம் அறக்கட்டளை,
இராமநாதபுரம் & ரெகுநாதபுரம் நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.