தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம், மானியாத அள்ளி ஊராட்சியில் உள்ள மேல் பூரிக்கல் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் கடந்த மாதம் தேசிய திறனாய்வு தேர்வு எழுதினர்கள். இந்த தேர்வில் மொத்தம் 7-மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும்,தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்களுக்கும்,வார்டு உறுப்பினரும் முன்னாள் பள்ளி மேலாண்மை குழு தலைவருமான
சந்திரகாந்த், புஷ்பராஜ் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார். மாவட்டத்தில் நடுநிலைப் பள்ளிகளில் 4-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.



