வேலூர்=16
நீண்ட நாள் கோரிக்கையான கால்வாய் பணி கொட்டும் மழையில் கட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கால்வாயில் மணல்கள் மூடப்பட்டு இருப்பதால் சிறிது நேரம் மழை பெய்தாலே மழை நீருடன் கழிவுநீர் கலந்து தெருக்களில் ஆறு போல் ஓடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால் கால்வாயில் தூர்வார கோரி பலமுறை மாநகராட்சியிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டு தற்போது கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது அதில்
வேலூர் மாநகரத்துக்கு உட்பட்ட கொசப்பேட்டை பகுதியில் உள்ள 34-வது வார்டில் நைனியப்பன் தெரு மானம் பார்த்த ஜமீதா தெரு மற்றும் மேலும் சில தெருக்களில் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக ஓரிரு நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று மாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது அதனை சிறிதும் பொறுப்பெடுத்தாமல் தண்ணீர் வரும் கால்வாய் மூடப்பட்டு கொட்டும் மழையில் கால்வாய் பணிகளை செய்து வருகின்றனர்.
அந்தப் பகுதியில் சிறிது நேரம் மழை பெய்தாலே மலைப்பகுதியில் உள்ள தண்ணீர்கள் கால்வாய் வழியாக வரும் இதனால் மழைநீருடன் கழிவு நீர் கலந்து ஆற்றின் வெள்ளம் போல் தெருக்களில் தண்ணீர் வரும் அப்பகுதியில் சிமெண்ட் கலவையைக் கொட்டப்பட்டு கால்வாய் திட்டை அமைத்து வருகின்றனர்
மிதமான மழை பெய்து கொண்டிருக்கும்போது சிமெண்ட் கலவையை கொட்டி கால்வாய் பணியை அமைத்து வருவதால் மழையில் அடித்து செல்லும்கூட எண்ணாமல் கால்வாய் பணியில் ஈடுபட்டு வருவது பொதுமக்களின் இடையே மாநகராட்சி ஊழியர்கள் கடமைக்கு வேலை செய்து வருவதாக அப்பகுதி மக்களிடையே வேதனையை அளித்துள்ளது
கொட்டும் மழையில் போடப்பட்ட இந்த கால்வாய் தரத்தை மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என சமூக அறிவியல் கோரிக்கையாக உள்ளது