ஈத்தாமொழி, பிப்-8
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தர்மபுரம் ஊராட்சி தலைவராக ரங்கநாயகி (60) என்பவர் இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் தங்க கிருஷ்ணன் (37) அதே ஊராட்சி வார்டு உறுப்பினராக இருந்தார். மற்றும் ஜெரூபன் (38).
இந்த நிலையில் ஜெயரூபன் புதிதாக கட்டிய வீட்டிற்கு ரசீது போட வேண்டி தனது நண்பரான தங்க கிருஷ்ணனிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் ரெண்டு பேரும் சேர்ந்து போலி முத்தரையிட்டு ரசீது தயார் செய்து பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரங்கநாயகி ஈத்தாமொழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தங்ககிருஷ்ணன், ஜெயரூபன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.