தஞ்சாவூர். பிப்.27.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் இலக்கியத்துறை சார்பில் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துணை வேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை வகித்தார் பதிவாளர் (பொ)பன்னீர்செல்வம் மொழிபுலமுதன்மையர்இளையாப்
பிள்ளை, கவிஞர் இராகவேந்திரன்
ஆகியோர் பேசினர்.
மூத்தப்பத்திரிக்கையாளர் மாலன் கலந்து கொண்டு பேசினார் அவர் பேசியதாவது:
பேசுவது போலவே எழுதுவது புத்தகம் என பாரதியார் கூறினார் கொச்சை நீங்கிப்பேசுவது போல தமிழில் எழுத வேண்டும் என சி.பா ஆதித்தனார் குறிப்பிட்டார்.
தமிழ் நாடு மக்கள் ஒரே மாதிரியாக பேசுவதில்லை எனவே பத்திரிக் கை அச்சிடப்படும் வட்டாரத்தில் எந்த மாதிரியாக பேசப்படுகிறதோ ,அதேபோலவே பதிப்பிக்க வேண் டும் என முடிவு செய்து செயல் படுத்தியவர் ஆதித்தனார் .படிப் போருக்கு புரிய வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது தமிழில் முதல் முதலில் கார்ட்டூன் என்கின்ற கருத்துப் படத்தை அறிமுகப்படுத்தியவர் பாரதியார். ஆதித்தனார் வெளியிட்ட கார்ட்டூனில் செயல் இருந்தது அப்போதுதான் மக்கள் பார்த்து ரசிப்பார்கள் என கருதினார். அவர் பேரவை தலைவராக இருந்தபோது சட்டப்பேரவைத் தலைவராக . இருந்த போது, சட்டப் பேரவை விதி களை தமிழ் படுத்தி கொடுத் தார் .ஆனால் மசோதா என்ற சொல்லை அப்படியே பயன்படுத்தினார் பத்திரிக்கை படிப்பவர்களுக்கு மட்டுமல்ல, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக அப்படியே பயன்படுத்தப்படுகிறது என்ற காரணத்தையும் கூறினார் .
சி.பா.ஆதித்தனார் பல புதிய சொற்களை உருவாக்கினார். .மக்களிடத்திலிருந்து சொற்களை பெற்று பயன்படுத்தினார். மக்கள் உருவாக்குவது தான் மொழி என்பது அவரது அடிப்படை நம்பிக்கையாக இருந்தது. கிரந்த எழுத்து என்பது வடமொழி அல்ல என குறிப்பிட்டார் .எனவே மாஸ்கோ, எம்ஜிஆர், சிவாஜி, ராஜாஜி போன்றவற்றுக்கு ஸ், ஜி போன்ற சொற்களை பயன் படுத்தினார். புதிதாக சொல் வந்தால், அது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே எழுத வேண்டும் என்பார். நமக்கு தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் என கூறினார் பாரதியார். அதில் உழைத்தல், சோராதிருத்தல் வரி பத்திரிக்கையாளனுக்காக சொல்லப்பட்டது .அதை சி.பா. ஆதித்தனார் செயல்படுத்தினார் பாரதியார் வழியில் பத்திரிகையை நடத்தியவர் சி.பா.ஆதித்தனார் என்றார் மாலன்.
முன்னதாக இலக்கியத் துறை தலைவர் தேவி அனைவரையும் வரவேற்றார். உதவி பேராசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்