நிலக்கோட்டை, செப். 11 –
பரமக்குடியில் நடைபெறும் தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது குருபூஜையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட எல்லையான பள்ளப்பட்டி சோதனை சாவடியில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட எல்லையான பள்ளப்பட்டி சோதனை சாவடியில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறும் தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது குருபூஜை விழாவிற்கு செல்லும் வாகனங்களை திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சார்பில் 2 டிஎஸ்பிக்கள், 4 ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள் தலைமையில் 4 ரோந்து வாகனங்கள் உட்பட 150 காவல்துறையினர் இரண்டடுக்கு பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைத்து உரிய வாகன அனுமதி பெற்றுள்ளனரா, தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றனர். ஏற்பாடுகள் அம்மையநாயக்கனுர் காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன் தலைமையில் செய்யப்பட்டது.



