தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் உற்சவர் திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் அதனைத் தொடர்ந்து பகவதி அம்மன் சாமி வீதி உலா நடைபெற்றது
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் அமைந்துள்ள 500 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு பகவதி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலின் உற்சவ திருவிழாவை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி முதல் 8 நாட்களாக சமுதாயம் சார்பாக மண்டகப்படி மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பகவதி அம்மன் சுவாமிக்கு பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக விரதம் இருந்து முளைப்பாரி போட்டு கோவில் வளாகம் முன்பு வைத்து கும்மி அடிக்கப்பட்டு, அங்கிருந்து ஊர்வலமாக ஆடு பாலம் அருகே உள்ள விநாயகர் கோவில் பகுதியில் கரகம் ஜோடிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மேலும் கரகம் ஜோடிக்கப்பட்டு அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக தேரடி வீதி, மேலரத வீதி, அரண்மனை தெரு, பகவதி அம்மன் கோவில் தெரு, உள்ளிட்ட வழிகளாக பிரம்மாண்டமான சுவாமி வேடம் அணிந்து நடனமாடி சென்றனர்.
அதனைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் வான வேடிக்கை மேளதாளத்துடன் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அருள்மிகு பகவதி அம்மன் சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வரை நடைபெற்றது. இதில் சாலையில் இருபுறங்கள் இருந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.