கன்னியாகுமரி மே 1
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜேம்ஸ் டவுண் சந்திப்பு பகுதியில் கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு திமுக பேரூர் துணைச் செயலாளரும் சமூக சேவகருமான ஆட்டோ சொர்ணப்பன் தலைமையில் தொடர் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ஆட்டோ சொர்ணப்பனின் சிறந்த சமூக சேவையை பாராட்டி அவருக்கு தமிழ்நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் மாநில பொதுச் செயலாளர் தலைமையில் மாநில அறக்கட்டளை நிறுவன பாஸ்கர் விருது வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து சமூகத்தில் சிறந்த சேவைகள் செய்து வரும் அஞ்சை லிங்கம், மணிகண்டன், அனிதா, பட்டு, ராஜேந்திரன், பிரசாந்த், கலைச்செல்வன், பவித்ரன், எஸ் எம் விவேக், ராகுல் ஆகியோரது சேவைகளை பாராட்டி விருது வழங்க கௌரவிக்கப்பட்டது.