போகலூர், அக்.10-
ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் ஸ்ரீ வல்ல பை ஐயப்பன் ஆலயத்தில் நவராத்திரி விழாவில் இன்று சுமங்கலி பூஜை விழா ஸ்ரீ வல்ல பை ஐயப்பன் அருள் ஆசியுடன் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து ஒவ்வொரு வருடம் இந்த சுமங்கலி விழா நடைபெற்று வருகிறது. 25வது ஆண்டு சுமங்கலி விழாவாகும். ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்று கூடி சுமங்கலி பூஜையை சிறப்புடன் பூஜை நடத்தி வருகின்றார்கள். குடும்பம் நலவேண்டியும் குழந்தை பாக்கியம் வேண்டியும் திருமண தடை நீங்கவும் குடும்பத்தில் செல்வம் பெருகவும் அனைத்து தோஷங்கள் விலகவும் இந்த பூஜையை பெண்கள் நடத்தி வருகிறார்கள். இவ்வருடம் சுமங்கலி பூஜை பிரசாதமாக சுமங்கலி பிரசாதங்களும் வேல்மாறல் பூஜை எவ்வாறு நடத்துவது என்று வேல்மாறல் பூஜை உடைய முழு பொருள் ஆன ஓம் என்ற வேலுடன் பொருந்திய விளக்கும் வேல்மாறல் புத்தகமும் சுமங்கலி பிரசாதங்களும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த வேல்மாறல் பூஜை என்பது பண்டைய காலத்தில் இருந்து நடத்தி வருகின்ற பூஜை ஆனது இன்று மிகவும் பிரசித்தி பெற்று அனைத்து இடங்களிலும் இந்த பூஜை இன்று சிறப்புடன் துவங்கியுள்ளது. இந்த வேல் மாறல் பூஜை உலக நலன் வேண்டி சிறப்புடன் பூஜை நடைபெற்றது. அனைவரும் மகிழ்வுடன் வாழ ஸ்ரீ வல்ல பை ஐயப்பன் கோயில் சார்பாக நடைபெற்றது. பூஜையில் ராமநாதபுரம் ரெகுநாதபுரம் வழுதூர் வாலாந்தரவை திருப்புல்லாணி குயவன் குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பெண்களும் ஆண்களும் சுவாமி மார்களும் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.. விழா ஏற்பாடுகளை குருசாமி மோகன் சாமி தலைமையில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.