கரூர் – ஆகஸ்ட் – 29
தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டு துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி 2023-20 24 -ம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் மீ.தங்கவேல் கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
அந்த வகையில் கராத்தே, பரதநாட்டியம் மற்றும் ஓவியத்தில் சிறந்து விளங்கிய 6 கலைஞர்களுக்கு கலை இளமணி விருது மற்றும் தலா ரூபாய். 4 ஆயிரமும், நாதஸ்வரம், ஓவியம் ,கரகாட்டம் பாரதநாட்டியம்,கோலாட்டம், மற்றும் குறலிசை ஆகிய கலைகளில் சிறந்து விளங்கிய 6 கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதுகள் மற்றும் தலா ரூபாய் 6 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதை போல் கிராமிய பாடல், ஓவியம், நாதஸ்வரம், நாடகம் மற்றும் குரலிசை ஆகிய கலைகளில் சிறந்து விளங்கிய ஆறு கலைஞர்களுக்கு கலை சுடர்மணி விருதுகளும் தலா ரூபாய் 10 ஆயிரமும் ,நாடகம் தவில் மற்றும் ஆர்மோனியம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கிய 6 கலைஞர்களுக்கு கலை நண்மணி விருதுகளும் ரூபாய் 15 ஆயிரமும் வழங்கப்பட்டது.
மேலும் கலை பிரிவு நாடகம் . கிராமிய பாடகி தவில் நகைச்சுவை நடிகை ஆகிய கலைகளில் சிறந்து விளங்கிய ஆறு கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதுகளும் தலா 20 ஆயிரமும் என மொத்தம் 30 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கலைப் பண்பாட்டு துறை உதவி இயக்குனர் செந்தில் குமார், அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி மற்றும் இசைப்பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.