திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம், புனித ஜான்பால் அகாடமி மற்றும் பிரவீன் செல்வகுமார் நினைவு கேரம் இணைந்து நடத்திய 6- ஆம் ஆண்டு தெய்வத்திரு. சந்தியாகு- சிறுமணியம்மாள் நினைவு கேரம் போட்டி நிகழ்ச்சி திண்டுக்கல் புனித ஜான்பால் அகாடமியில் நடைபெற்றது. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி திண்டுக்கல் புனித ஜான்பால் அகாடமியில் உள்ள சேவியர் ஹாலில் புனித சேவியர் ஹாலில் நடைபெற்றது. இப்பரிசளிப்பு விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்க தலைவர் Rtn.G.சுவாமிநாதன் தமிழ்நாடு கேரம் சங்கத்தின் துணைத் தலைவர் Ln. Dr. N.M.B காஜாமைதீன் ,புனித ஜான்பால் அகாடமி தாளாளர் அருட்தந்தை
S.பன்னீர்செல்வம் , திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் துணைத் தலைவர் Ln.Dr.N.S.A.ஜெய ஆரோக்கிய செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்தி பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் லூயிசாரெமி , பிரவீன் செல்வகுமார் அகாடமின் தலைவர் திலீப்மேண்டிஸ்,
செயலாளர் ஜெஸ்பர் செல்வகுமார் , A.சாம்சன், ஆ.ஜோசப் சார்லி ஆதாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.பள்ளி மாணவர்களுக்கான ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பிற்கான தெய்வத்திரு. சந்தியாகு நினைவு சுழற் கோப்பையை திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியினர் பெற்றனர். பள்ளி மாணவியர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பிற்கான தெய்வத்திரு. சிறுமணியம்மாள் கோப்பையை வத்தலகுண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியினர் பெற்றனர். பிரவீன் செல்வக்குமார் நினைவு ஆண்கள் ஒற்றையர் சுழற் கோப்பையை T. பெலிக்ஸ் பெற்றார். இப்போட்டிகளை தலைமை நடுவராக S.மருதமுத்து , உதவி தலைமை நடுவராக சசி பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட கேரம் சங்கத்தின் செயலாளர் P.ஆல்வின் செல்வக்குமார் மற்றும் மாவட்ட கேரம் சங்கம், புனித ஜான்பால் அகாடமி மற்றும் பிரவீன் செல்வக்குமார் நினைவு கேரம் அகாடமி நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.