திருப்பூர் ஜூன்:4
பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் மாநகர காவல் துறை காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் தலைமையில் தேர்தல் கட்டுப்பாடுகள் காரணமாக மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு பணிகள்,கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள்,வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகை தரும் நபர்களிடம் தேர்தல் விதிகளின்படி சோதனை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை காவல்துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்டன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பூர் மாநகரத்தில் உள்ள துணை ஆணையர்,உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் ,உட்பட திரளாக கலந்து கொண்டனர்.



