தஞ்சாவூர் ஜூலை 18
தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு 11 நாட்கள் நடந்த ஆஷாடநவராத்திரி விழா நிறைவடைந்தது.அம்மன் வீதி உலா நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் ,பெரியநாயகி அம்மன், விநாயகர் முருகப்பெரு மான் நடராஜர் சண்டிகேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. அந்த வகையில் தனி சன்னதியில் வராகி அம்மனும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்த வராகிஅம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கள் நடைபெறும் .அதன்படி இந்தாண்டு 22 வதுஆஷாடநவராத் திரி விழா கடந்த 5ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங் கியது .அதைத் தொடர்ந்து கணபதி அபிஷேகம் வராகிஅபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அம்மனு க்கு இனிப்பு அலங்காரம் நடைபெற் றது .விழாவை தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது வராகி அம்மனுக்கு தினமும் ஒரு அலங்காரமும் நடைபெற்றது அதன் படி மஞ்சள் அலங்காரம், குங்குமம் அலங்காரம் ,சந்தன அலங்காரம், தேங்காய் பூ அலங்காரம், மாதுளை அலங்காரம், நவதானிய அலங்கார ம் , வெண்ணெய் அலங்காரம் கனி வகை அலங்காரம், காய்கறி அலங் காரம் நடைபெற்றது.
அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது .நாதஸ்வரம், கரகாட் டம் ஒயிலாட்டம், ஜெண்டை வாத்தி யம்,வேடிக்கையுடன் வராகி அம்மன் வீதி உலா வந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம் பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்சிலே ,உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர்கள் மாதவன், மணிகண்டன் மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள் செய்திருந்தனர்