அரியலூர்,ஜூன்:04
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101-வது பிறந்தநாள் நேற்று விழாவை முன்னிட்டு,அண்ணா சிலை அருகில், பேரறிஞர் அண்ணா அவரது முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு, ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில், கழக சட்டதிட்ட திருத்தக்குழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர்,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில், மாலை அனுவித்து,இனிப்புகள் வழங்கி,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவில் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்ரமணியன், அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆ.சங்கர்,மாவட்ட துணை செயலாளர் மு.கணேசன் மற்றும் மாவட்ட, நகர கழக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.