கிருஷ்ணகிரி: ஏப்:4,
தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவராக கிருஷ்ணகிரியை சேர்ந்த பூபதி பொறுப்பேற்ற நிலையில் அவருடன் பொதுக்குழு மற்றும் மாநில பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதியதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு கிருஷ்ணகிரி மைய மாவட்டம் சார்பில் பாராட்டு விழா கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் வருவாய் துறை சங்கத்தின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் வருவாய் துறை சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் உரையாற்றுகையில், மாநில அளவில் கிருஷ்ணகிரி என்பதை, மாநிலம் தான் கிருஷ்ணகிரி என்று கூறும் அளவிற்கு கிருஷ்ணகிரிக்கு பெருமை தேடி தந்துள்ளார். மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு வருவாய் துறையின் சார்பில் மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இது ஏதோ ஒரு நாளில் வந்த பதவி அல்ல., பல்வேறு போராட்டங்கள்., கோரிக்கை முன்னெடுப்பு., போன்ற பல்வேறு தொடர் போராட்ட குணங்களால் இந்த பதவியை பெற்றுள்ளார். அவரின் உழைப்புக்கு ஏற்ற பதவி கிடைத்துள்ளது என்று வாழ்த்தி பேசினார். இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய மாநில தலைவர் பூபதி., தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கைகளை முன்னெடுக்க தன்னால் முடிந்தளவு அற்பணிப்புடன் உங்களின் ஒருவனாக பணியாற்றி சங்க வளர்ச்சிக்கு பாடுபட உள்ளதாக தெரிவித்தார். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பும் அவசியம் எங்களுக்கு தேவை எனவும், எதிர்வரும் காலங்களில் நமது சங்கத்தின் கோரிக்கைகளை உங்களின் ஒத்துழைப்போடு வென்றெடுப்போம் என உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறை சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயசங்கர்., வட்டாட்சியர்கள் பெருமாள்., கிருஷ்ணமூர்த்தி, சரவணமூர்த்தி., ராமச்சந்திரன்., தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அறிவழகன் உள்ளிட்ட பல்வேறு கிராம நிர்வாக அலுவலர்கள்., கலந்துக் கொண்டு வாழ்த்தினர்..
கிராம நிருவாக அலுவலர்கள் பாராட்டு விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics