நாகர்கோவில் மார்ச் 22
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர்களை பாராட்டும் நிகழ்வில் சென்னையை சேர்ந்த ரம்யா முன்னிலை வைக்க மரு. கு. சிதம்பர நடராஜன், தலைமையில் பசுமை நாயகன் மரு. தி. கோ.நாகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மருத்துவர் நாகேந்திரன், பேசுகையில் இறைவன் அருளால் பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துதல் தெரிவிப்பதோடு குறிப்பாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச்வில்மோர் ஆகியோரை 286- நாட்களுக்குப் பிறகு பூமிக்கு அழைத்து வந்த பணியை விரைவுப்படுத்திய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்-க்கும், ஏலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் ,நாசா மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்ரோ மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி நமது நாட்டை வளர்ந்த நாடாக , வளமுள்ள நாடாக , வலிமையுள்ள நாடாக மாற்ற அனைத்து விஞ்ஞானிகளும் நம்மவர் இஸ்ரோ தலைவர் முனைவர்.வி .நாராயணன் பாடுபடுவார் எனவும், அதற்கான வசதிகளையும் வாய்ப்புகளையும் நமது மத்திய அரசும் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் செய்வார்கள் என நம்புவோம் . மங்கையர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கின்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் விண்வெளி பயணத்தையும் செயல்பாட்டையும் மத்திய மாநில அரசு பாடத்திட்டங்களில் சேர்ப்பதன் மூலம் வருங்கால சந்ததியருக்கு ஆக்கமும், ஊக்கமும் ,உந்து வேகமும் அளிக்கும் வரலாறாக அறியப்படும்.
வருங்கால விண்வெளி திட்டங்களில் இவர்களின் பெயர் சூட்டுவதால் சமுதாயத்திடையே விண்வெளி பயன்பாடும் இந்திய குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் நினைவில் வருவதோடு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் அமையும் என அவர் பேசினார்.
இறுதியில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பழங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.