திருப்புவனம்:மே:17
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் புண்ணிய பூமியாம் புஷ்பவனக் காசியென்னும் திருப்பூவனத்திற்கு தென்திசையில் அமைந்துள்ள அல்லிநகரம் கிராமத்தில் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு தண்டீஷ்வர அய்யனார் ஆலய வருடாபிஷேக தீர்த்த பூஜை விழாவிற்கான ஆரம்ப நிகழ்ச்சியான காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
அறங்காவலர் குழுத்தலைவர் மயில்வண்ணன் தலைமையிலும் கோவில் அறநிலையத்துறை அரசு அலுவலர்கள், பூசாரி சொக்கலிங்கம் , அறங்காவலர்கள் மூக்குச்சாமி , ஆதிப்பாண்டி , புஷ்பம், சரவணன் மற்றும் அல்லிநகரம், அ. வெள்ளைக்கரை, அ. முத்துப்பட்டி, அல்லிநகரம் காலனி உள்ளிட்ட கிராமப் பெரியோர்கள் மற்றும் பெண்கள் , பக்தர்கள் முன்னிலையில் இன்று முதல் திருவிழா நிகழ்ச்சியாக பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 16 ந்தேதி உழவர்பணி கூட்டுறவுசங்க முன்னாள் தலைவர் தண்டியப்பன் சேர்வை நினைவாக பொது அன்னதானமும் 17 முதல் 21 தேதி வரையிலும் விஷேச காலை பூஜைகளும், அதனைத்தொடர்ந்து 25 ந்தேதி திருப்புவனம் பேரூராட்சி தலைவர் மாவட்ட திமுக துணைச்செயலாளர் த. சேங்கைமாறன் , முன்னாள் சேர்மன், மேற்கு ஓன்றியக்தழக செயலாளர் வசந்தி சேங்கைமாறன், மற்றும் மாவட்ட திமுக விவசாய அணித் துணைத்தலைவர் சொக்கனாதிருப்பு டி. ஆர். சேகர் தமிழ்செல்வி ஆகியோர் குடும்பத்தினர் சார்பில் அன்று இரவு வள்ளிதிருமணம் நாடகம் உள்ளிட்ட பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் மயில்வண்ணன் உள்ளிட்ட அறங்காவவர்கள் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.