தஞ்சாவூர் நவ.7.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் செட்டிநாட்டு அரசர் டாக்டர் ராஜா சர். அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்கு முன்னதாக தொடங்கப்பட்டு, தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ் இசை மேம்பாடு உள்ளிட்டவத்திற்கும் 80 ஆண்டுக்கு மேலாக சென்னையில் உள்ள தமிழிசை சங்கம் தொண்டாற்றி வருகிறது .அச்சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் செட்டிநாட்டு அரசர் டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பேரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளை நிறுவுகைக் காக ரூபாய் 10 லட்சத்தை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவனிடம் தமிழிசை சங்க உதவி செயலாளர் ஏ ஆர் நாச்சியப் பன், பெரியார் பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் தங்கராஜ், தமிழிசை கல்லூரி முதல்வர் மீனாட்சிஆகியோர் வழங்கினர்.
இதுகுறித்து துணைவேந்தர் கூறுகையில் ,இந்த அறக்கட்டளை மூலமாக உலகெங்கும் நகரத்தார் ஆற்றிய தமிழ் தொண்டு, தமிழ் இதழியல் துறைக்கு ஆற்றிய பணிகள், பதிப்பு துறை, கடல் கடந்த வாணிபம் உள்ளிட்ட பெருண்மை களின் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட உள்ளது .தமிழ் மொழி மற்றும் தமிழ் இசைத்துறையில் சிறந்த ஆய்வுகள் மேற்கொண்ட வல்லுநரு க்கு ஆண்டுதோறும் விருது வழங்கல் மற்றும் மாணவர்களுக் கான பயிலரங்குகள் நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட வுள்ளன என்றார்.
மேலும் தமிழ் பல்கலைக்கழகத் தால் உலகம் முழுவதும் நடத்தப் பட்டு வரும் தமிழ் வளர் மையத் துடன் தமிழ் இசை சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது .இதன் மூலம் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர் மையத்தால் நடத்தப்படும் சான்றிதழ், பட்டயப்படிப்புகள் போன்றவற்றை தமிழ் இசை சங்கம் சென்னையில் நடத்தவுள்ளது எனவும் துணைவேந்தர் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) தியாகராஜன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இளையா பிள்ளை, வளர் தமிழ்ப் புல முதன்மையர்.குறிஞ்சி வேந்தன், நிதி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, நல்கைப்பிரிவு அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.