கிருஷ்ணகிரி,ஜூன்.2- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி மத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இந்திய விடுதலைப் போராட்ட தியாகி தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைக்கப்படும் அஞ்சலை அம்மாளின் 135- வது பிறந்தநாள் விழா, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் இ .முரளிதரன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். சுகுமார் விழா ஏற்பாட்டில், மாவட்ட இணைச் செயலாளர் தாமோதரன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீஸ்வரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மிதுன், மகளிர் அணி அமைப்பாளர் தீபா, பர்கூர் ஒன்றிய செயலாளர் பசுவராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் ராமதுரை உள்பட கழக நிர்வாகிகள் இப்ராஹிம், ரமேஷ், மணிகண்டன், மோகன்,சூர்யா, அருணாசலம், சக்தி, அறிவு, ஸ்ரீதர், ரேவந்த், திருமால், மோகன், சீனிவாசன், கதிர்வேல், முருகேசன், வினோத், சிவா, முகேஷ்,சந்தோஷ், தசரதன், வெங்கடேசன், கோபால், சபாபதி உள்பட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலை அம்மாளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அஞ்சலை அம்மாளின் 135- வது பிறந்தநாள் விழா



