தஞ்சாவூர் பிப்.24.
தஞ்சாவூர்பிராணிகள் வதை தடுப்பு சங்கம் (எஸ்.பி.சி.ஏ) கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மேலாண்மை குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் குறித்து குழு உறுப்பினர்கள் பேசினர் .அதன்படி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பிராணிகள் வதை தடுப்பு சங்க கட்டிடத்தில் செல்ல பிராணி களை பராமரிக்க கூடுதல் கட்டிடம் கட்டுதல், அறுவை சிகிச்சை கூடத்திற்கு உபகரணங்கள் கொள்முதல் செய்வது ,வெறி நோய்களுக்கு தடுப்பூசி பணிகள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மேலாண்மை குழு உறுப்பினர்களால் விவாதிக்கப் பட்டது.
இதில் மாவட்ட ஆட்சித் தலைவரி ன் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்