By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனவர்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் சமூகவிரோதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீனவர்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் சமூகவிரோதி
கனஂனியாகுமரிமாவட்டம்

மீனவர்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் சமூகவிரோதி

Last updated: June 13, 2024 5:37 pm
June 13, 2024 64 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூன் – 13

 

அரசு அங்கிகரித்துள்ள “காச்சா மூச்சா வலை” தொழிலை காரணம் காட்டி மீணவர்களிடையே பிரிவினை ஏற்ப்படுத்த நினைக்கும் சமூக விரோதிகளை தடுக்க கோரி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கட்டமைப்பு சி ஐ டி யு பொதுச் செயலாளர் அந்தோணி தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

 

உலகில் மாறிவரும் காலநிலை மற்றும் தேவைகளின் அடிப்டையில் தொழில் துறைகளில் மாற்றம் உண்டாவது என்பது தவிர்க்க இயலாதது. மீன்பிடித்துறையும் விதிவிலக்கல்ல. எல்லாக் காலங்களிலும் நவீன உத்திகளை பின்பற்றி மீன் பிடிக்கும் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 

அதிலும் கன்னியாகுமரி மாவட்டம்  உலக அளவில் தலைசிறந்த மீனவர்களை கொண்ட பகுதியாகும். மீன்பிடிப்பதில் பல நவீன வழிகளை உலகிற்கே பரிசளித்தவர்கள் இப்பகுதியைச் சார்ந்தவர்களே. அதன் ஒரு பகுதியாக சமீபகாலத்தில் கணவாய் மீன்களை அதிக அளவில் பிடிப்பதற்காக “காச்சாமூச்சா வலை” எனப்படும் 3 அடுக்குச் செவிள்வலையின் பயன்பாடு பெருகி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் இந்த வலையைப் பயன்படுத்துவது சம்மந்தமாக மீனவர்களுக்கிடையே பெரும் மோதல் ஏற்பட்டு படகுகளையும், தொழில் கருவிளையும் சேதப்படுத்துமளவிற்கு பிரச்சனை பொரிதான போது அன்றைய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் பிரசாந்த் வடநேரே தலைமையில் கல்குளம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார்கள் சுஜித் மற்றும் அனில்குமார், மீன்வளத்துறை துணை இயக்குநர் ஜெயக்குமார், உதவி இயக்குநர்கள் நடராஜன், தீபா, கன்னயாகுமரி காவல் கண்கானிப்பாளர் முத்துப்பாண்டியன், நாகர்கோவில் வட்டாச்சியர் வீரசாமி ஆகியோர் முன்னிலையில்

 

இரு மீனவர் தரப்பினரையும் வைத்து விவாதித்து இந்த வலையை தமிழ்நாடு டாக்டர். ஜெயலலிதா மீன்வளப் பல்கலை கழகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்வது என்றும், ஆய்வின் முடிவு வந்தபின் இது தொடர்பாக நிரந்தர முடிவு எடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதுவரை சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த தொழிலை செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. 

 

அதன்படியே ஆய்வு முடிவு வந்தபின் ஆய்வின் முடிவை மையப்படுத்தி இந்த வலையால் மீன்வளத்திற்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்தவித ஆபத்தும் இல்லை என்றும், இருப்பினும் தூண்டில் கொண்டு இத்தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தையும் கணக்கில் கொண்டு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு இத்தொழிலை செய்யலாம் என்றும் மீன்துறையால் ஆணைப் பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி இன்று வரை பெரிய பிரச்சனைகள் ஏதுமின்றி இத்தொழில் நடந்து வருகிறது. இத்தொழில் அரசால் அங்கீகரிக்கப்பட்டதால் இன்று பழவேற்காடு முதல் நீரோடி வரை அனைத்து கிராமங்களிலும் இத் தொழில் செய்யவர்களின் எண்ணிக்கை வெகுவாக கூடியுள்ளது.

 

இந்நிலையில் கடந்த வருடம் 2023-ல் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக்குழு இயக்குநர் அருட்பணி. டன்ஸ்டன் வழியாக சிலரது முயற்சியில் மீண்டும் ஒரு கருத்துக் கேட்பு கூட்டம் நாகர்கோவில் சிபிடி அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அதில் மீனவர்கள் வாக்குவாதம் முற்றி கைகலப்புக்கு சென்றதால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் விளைவாக குளச்சல் துறைமுகத்தில் இந்த வலைக்கு எதிராக சிலர் பிரச்சனை செய்தனர். எனவே மீன்வளத்துறை அவர்களை அழைத்து கண்டித்து அரசு அங்கீகரித்த ஆணையை அனைத்துத் துறைமுகங்களிலும் பங்குத்தந்தையர்கள் வழியாக ஆலயங்களிலும் அறிவிக்கச்

செய்தது. அதன்பின் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

 

தற்போது இந்தத் தொழில் தொடங்க இருக்கும் நிலையில், சமீபக் காலமாக தொடங்கப்பட்ட “பாதர் தாமஸ் கொச்சேரி மீன்பிடித் தொழிலாளர் சங்கம்” நிறுவனர் அருட்பணி. கிளாரட் இந்த பிரச்சனையை மீண்டுமாக கையிலெடுத்து மீனவர்களை திரட்டும் முயற்சியில், குறிப்பாக தேங்காய்பட்டணம், குளச்சல், முட்டம் துறைமுகப் பகுதிகளில் இப்பிரச்சனையைத் தூண்டி மீனவர்களை பிளவுபடுத்தி மோதவிட்டு தமது சங்கத்தை வளர்க்கும் மிக குறுகிய நோக்கத்தில் இந்த பிரச்சனையை மீண்டுமாகத் தூண்டி மீனவர்களின் அமைதியை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

எனவே இந்தப் பிரச்சனையில் உடனடி சிறப்பு கவனம் செலுத்தி அரசின் ஆணைப்படி பெரும் முதலீடுச் செய்து தொழில் புரியும் மீனவர்களின் தொழிலையும், தொழிற்கருவிகளையும் பாதுகாப்பதோடு, கடலிலும், கடற்கரையிலும் மீனவர்கள் மத்தியில் ஏற்படவிருக்கும் மோதலையும் தவிர்த்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் தர வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டுமென்றும் 

 இந்தப் பிரச்சனையில் உடனடி சிறப்பு கவனம் செலுத்தி அரசின் ஆணைப்படி பெரும் முதலீடுச் செய்து தொழில் புரியும் மீனவர்களின் தொழிலையும், தொழிற்கருவிகளையும் பாதுகாப்பதோடு, கடலிலும், கடற்கரையிலும் மீனவர்கள் மத்தியில் ஏற்படவிருக்கும் மோதலையும் தவிர்த்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் தர வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டுமென்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 இந்நிகழ்வில்  தமிழ்நாடு மீன் தொழிலாளர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அந்தோணி, மீன் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் அலெக்சாண்டர், செயலாளர் சகாய பாபு, ஜார்ஜ் மற்றும் அனைத்து சங்க மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் இணையம் நிர்வாகிகள், ஹெலன்நகர் புனித சவேரியார் மீன்பிடிச் சங்க  நிர்வாகிகள் மற்றும் இணையம் புத்தம்ந்துறை, இராமன் துறை, முல்லூர் துறை, கன்னியாகுமரி, குளச்சல், பெரியவிளை ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டார்கள்.

You Might Also Like

விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திமுக இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்

பிள்ளைமடம் அருகே கடற்கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதை தடுக்க கோரி ஊர் மக்கள் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்

July 8, 2025 12 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
காப்புக்காட்டில் நான்கு வழிச்சாலை பணி தடுத்து நிறுத்தம்தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ. உட்பட 9 பேர் கைது
ஸ்ரீ பட்டாபி ராமருக்கு விசேஷ பூஜைகள்
அதிமுக மாணவரணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?