மதுரை மாநகராட்சி குடிநீர், சாலைகள், பாதாள சாக்கடை திட்டம், கனிம வள கடத்தலை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 200 பெண்கள் உட்பட 600 பேர் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா முன்னிலை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை வகித்தார். அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்



