செங்கம்
மார்ச் 24
திருவண்ணாமலை மாவட்டம்
செங்கம் தேர்வுநிலை பேரூராட்சி கூட்டரங்கில் திமுக மன்றத் தலைவர் சாதிக்பாஷா தலைமையில் 17 வார்டு உறுப்பினர்களுடன் சாதாரண மன்றக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அதிமுக வார்டு உறுப்பினர்கள் 18 வார்டுகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செயல் அலுவலர் திருமூர்த்தி வசம் அதிமுக-வினர் பல கேள்விகளை எழுப்பி ஆதாரம் கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக-வை சேர்ந்த ஆறு வார்டு உறுப்பினர்களும் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை அலுவலகத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நீடிக்கும் எனவும் மேலும் எங்கள்
கேள்விகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்த உள்ளிருப்பு தொடரும் போராட்டம் எனத் தெரிவித்தனர்.



