திருவில்லிபுத்தூர் குழந்தைகள் பாலியல் குற்ற தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம்
போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்டம், மாரனேரி காவல் நிலைய சரகம், மலையப்பன் என்பவரின் மகன் முனியராஜ் (23/2023) அப்பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக, அந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் கடந்த 2023.ம் வருடம் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருவில்லிபுத்தூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த திருவில்லிபுத்தூர் குழந்தைகள் பாலியல் குற்ற தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் மேற்படி முனியராஜ் என்பவரை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.