மதுரை ஜூலை 23,
மதுரை அழகர்கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம் மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் கருப்பணசாமி கதவுகள்
மதுரை மாவட்டம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் ஆடிப்பெரும் திரு விழாவானது கடந்த 13 ஆம் தேதி கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் என்ற கள்ளழகர் கருட, அனுமார், தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினந் தோறும் காலை மற்றும் மாலை வேளையில் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் காலை 7 மணி அளவில் 60 அடி உயரம் கொண்ட
திருத்தேரில் எழுந்தருளினார். இதனை
தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷம் முழங்க வடம் பிடித்து தேரை இழுக்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 108 வைணவ திருத்தலங்களில் மிக முக்கிய தளமாக விளங்கக்கூடிய இந்த அழகர் மலையில் ஆண்டுதோறும் 1 சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி அன்று வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை தொடர்ந்து, ஆடி மாதத்தில் . 11 நாட்கள் திருவிழா கோவில்
வளாகத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் ஒன்பதாம் நாள் திருவிழா ஆடிப்பௌர்ணமி நாளன்று தேரோட்டம் நடைபெற்றது. நான்கு மாட வீதிகளில் வலம் வரும் தேரை பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க இழுத்தனர். முன்னதாக சுந்தரவல்லி தாயார் யானை பவணி வர செண்டை மேளம், நாதஸ்வரம் உள்ளிட்டவை ஒலியெழுப்ப மிக விமர்சையாக இந்த தேரோட்டமானது சிறப்பாக நடைபெற்றது. கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கினர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக மதுரை எஸ்பி தலைமையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த தேரோட்டத்தை தொடர்ந்து
அழகர் கோவிலில் உள்ள 18 ம்படி கருப்பணசாமி சன்னதியில்
ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பௌர்ணமியன்று மாலையில் கதவுகள் திறக்கப்பட்டு 18 படிகளுக்கும் படி பூஜை செய்து தீபாராதனை காண்பித்து கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படியாவது வழக்கம். ஆடி பௌர்ணமியன்று கருப்பணசாமி கோவிலில் 18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்பட்டு கதவுகள் திறக்கப்பட்ட உடன் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு வழிபட்டனர். அழகர் கோவில் மட்டுமல்லாது அழகர் கோவில் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்தும் மதுரை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.
சில பக்தர்கள் அருள் வந்து ஆடினர். தொடர்ந்து தீர்த்தவாரி, இன்று உற்சவ சாந்தி நடக்கிறது. இத்திருவிழா ஏற்பாட்டினை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் கலைவாணன், கண்காணிப்பாளர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவில் பணியாளர்கள் ஆகியோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.