பளுகல், மார்- 20
அருமனை அருகே உள்ள இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் மகள் மோனிஷா (23) இவருக்கும் சுபின் ராஜ் என்பவருக்கும் கடந்த 25- 1 – 2023 அன்று திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக மோனிஷா கணவருடன் கோபித்துக் கொண்டு இடைக்கோட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில் சம்பவ தினம் வழக்கம் போல் மாடியில் உள்ள படுக்கை அறைக்கு தூங்க சென்றார். மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் படுக்கை அறையை விட்டு வெளியே வரவில்லை.
இதையடுத்து தயார் ராணி அங்கு சென்று பார்த்தபோது மகளை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் மோனிஷா குறித்து இருந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து அவர் பளுகல் காவல் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தர கேட்டு புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.