கருங்கல், டிச- 7
புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் கதிரவன் (22). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் புதுக்கடையில் – கருங்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வட்ட கோட்டை என்ற பகுதியில் சென்றபோது, எதிரே கருங்கலில் இருந்து கனிம வளம் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது.
இதில் கதிரவனை சில அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு, டயரில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து கருங்கல் போலீசார் கதிரவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து லாரி பறிமுதல் செய்ததோடு டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கதிரவனுக்கு தாய் தந்தை யாரும் இல்லை என கூறப்படுகிறது.



