சவுதி அரேபியா, பிப்.27-
சவுதி அரேபியா ஆசீர் மாகாண அபஹாவில் பெட்ரோல் பங்கில் வேலைபார்த்து வந்த நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த ஹலிக்குல் ஜமான் என்பவர் கடந்த 4/11/2024 அன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு அபஹா பிரைவேட் ஹாஸ்பிட்டலில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளார். ஆனால் அவரை மீட்டு தாயகம் அனுப்ப உதவி தேவை என்று அவருடைய சகோதரர் அலாவுதீன் இந்தியன்ஸ் வெல்பேர் போரம் (IWF),சவுதி மண்டல ஒருங்கிணைப்பாளர் மீமிசல் நூர் முகம்மது அவர்களிடம் ரியாத் மண்டல வணிகர் அணிச் செயலாளர் விருத்தாச்சலம் பீர் முஹம்மது மூலமாக கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையின் அடிப்படையில் அசீர் மண்டல இந்தியன்ஸ் வெல்பேர் போரம் (IWF) பொறுப்பாளர் பூலாங்கால் அசன் பாரூக் மற்றும் இருவேலி சாதிக் நேரடியாக சென்று தேவையான முதல்கட்ட உதவிகளை செய்தனர். பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளை இந்திய துணை தூதரகத்தின் ஒத்துழைப்போடு
டாக்டர் நூஹ் (NRTIA), இப்ராஹிம் பட்டாம்பி CG (KMCC) சிராஜ் (JTS), டாக்டர்.சந்தோஷ் (NRT) சவுதி மண்டல தலைவர், ஆகியோரின் உதவியோடு நான்கு மாதங்களாக கடும் போராட்டத்துக்கு பிறகு 18/02/2025 அபஹாவில் இருந்து ஜித்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு 22/02/2025 ஜித்தாவில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்..உடல்நிலை பாதிக்கப்பட்ட ஹலிக்குல் ஜமான் அவர்களை அதே(SASCO) நிறுவனத்தில் பணிபுரியும் குமார்* உடன் சென்று இந்தியாவில் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.
இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.