கம்பம்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையில் எழுந்தருளியுள்ள விக்ரமபாண்டி முனிஈஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உலக சிவனடியார்கள் திரு கூட்டம் சார்பில் திருவாசக முற்றோதல் ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சங்க புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா பற்றி நாள் குறிக்கப்பட்டு பேசினர். இதில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்வினை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



