திருப்பத்தூர்:ஜன:30, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பயிற்சி பட்டறை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பானது ஆறு நாட்கள் நடைபெறும்.
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்கும் இந்த பயிற்சியில் கற்றல்- கற்பித்தல் திறன், விளையாட்டு, குழந்தைகள் மேம்பாடு, மருத்துவ பராமரிப்பு, இரண்டு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கான உடல் நலன், ஆரோக்கியமான உணவு முறை, தூய்மை பணிகள் மற்றும் குழந்தைகளின் செவித்திறன், கல்வி அறிவினை வளர்த்தல் போன்ற செயல்பாடுகள் குறித்த பயிற்சியினை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், உளவியல் சம்பந்தமான அலுவலர்களால் சம்பந்தமான பயிற்சிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அங்கன்வாடி பணியாளர்கள், அலுவலர்கள், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.