கன்னியாகுமரி செப் 28
குமரி மாவட்டம் கொட்டாரம் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.பேரூராட்சி தலைவி செல்வக்கனி தலைமையில் கூட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் கூட்டத்தை புறக்கணித்து பேரூராட்சி துணைத்தலைவி விமலா உட்படட 6 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள், வெளி நபர்கள் எழுதி தரும் தீர்மானங்களின்படி தீர்மான நோட்டில் திருத்தம் செய்வதை நிறுத்த வேண்டும் . மன்றம் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் . பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட நபர்கள் ஒப்பந்தகாரரிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட வார்டுகளில் மட்டுமே பணிகள் நடைபெறுவதை தவிர்த்து,அவ்வாறு நடைபெறும் பணிகளை ரத்து செய்ய வேண்டும்.
குடிநீர் பழுது என மாறுந்தோறும் ஒரே ஒரு ஒப்பந்தக்காரர் பல லட்சங்கள் மக்கள் வரிப்பணம் சுருட்டுவதை தவிர்க்க,குடிநீர் பழுது பார்க்க பேரூராட்சி மூலம் பல ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய வேண்டும் .
முறையான அனுமதி பெறாமல் தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய இளநிலை பொறியாளர் நடவடிக்கை எடுத்தல்,
அலுவலக பணிகள் வெளிப்படைதன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர்,மின்விளக்கு பொது சுகாதாரம் அனைத்து வார்டுகளிலும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் .
மன்றம் மீது நம்பிக்கை இல்லை என்ற புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .
திடக்கழிவு ஒப்பந்ததாரர்கள் மூலம் நடைபெறும் தூய்மை பணியினை அனைத்து வார்டுகளுக்கும் முறையே நடைபெற செய்ய வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் கவுன்சிலர்கள் பொன்முடி, தங்ககுமார், ரெத்தினம், சரோஜா, செல்வன் இருந்தனர்