நாகர்கோவில் – மே – 28,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள லெட்சுமி காம்ப்ளக்ஸில் நடக்க முடியாமல் மழைக்கு பயந்து கொண்டு தவழ்ந்து சென்று ஒதுங்கிய முதியவரை அப்பகுதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் வடமாநில நபர் ஒருவர் கையில் கம்புடன் வந்து (நாயை துரத்துவது போல்) ஈவு இரக்கம் இல்லாமல் துரத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பனியன் கம்பெனியில் பணிபுரியும் தமிழ்நாட்டு தொழிலாளர்களை அடித்து துரத்திய வடமாநில தொழிலாளர்களை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் இது போன்ற சம்பவங்கள் அறங்கேரி வருவது பெரும் வேதனை அளிக்கிறது . தாழக்கிடப்பாரை தற்க்காப்பதே தர்மம் என்று கூறிய அய்யா பிறந்த மன்னில் இது போன்ற செயல்களுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் குமரி மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து குமரி மாவட்ட மக்களை பாதுகாக்க வேண்டும். முதியவரைை கம்பால் துரத்தியடிக்கும் கடை உரிமையாளர் மீது மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து , கைது செய்யப்பட வேண்டும் அமைதியான முறையில் ” வந்தோரை வாழவைக்கும் குமரி மாவட்டத்தில் ” ஒண்டி வாழ வந்த வட மாநிலத்தார் அராஜகத்தை உடனே கட்டுபடுத்த வேண்டும் இல்லையேல் குமரி மாவட்ட மக்களின் அமைதி கேள்விக்குறியாகிவிடும். மேலும் குமரி மாவட்டத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடைபெறும் இது போன்ற சம்பவங்களால் பிறந்த மன்னில் நாம் அடிமையாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் இதனால் பல்வேறு பிரச்சணைகளுக்கு வழி வகுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்தாக உள்ளது.