திருப்பூர், செப்டம்பர் 05 –
ஆங்கிலேய பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே நீராவி கப்பல் கடல்வழிப் போக்குவரத்தை தொடங்கி வெற்றி பெற்ற சுதந்திர போராட்ட தியாகி, வழக்கறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்க தலைவர் என பன்முகம் கொண்ட செக்கிழுத்த செம்மல்.
சுதந்திர போராட்ட தியாகி ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154-வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி 32-வது வார்டு கருணாகரபுரி விநாயகர் கோவில் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பின்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் விழா மக்கள் சேவகர் ஆன்மீக செம்மல் சூர்யா செந்தில் தலைமையில் நடைபெற்றது.
இந்த அன்னதானத்தினை திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல தலைவரும் 32-வது வார்டு திமுக செயலாளர் தம்பி ஆர். கோவிந்தராஜ் அன்னதான விழாவினை துவக்கி சிறப்பித்தார். மேலும் ஆர்.எஸ் புரம் சஞ்சய் நகரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சுதேசி இளைஞர் பேரவை, அகில இந்திய வ.உ.சி பேரவை நிர்வாகிகள் கருடன் ரமேஷ், அருண், ஈஸ்வரன், கௌதம், பவுன்ராஜ், சுரேஷ், கந்தசாமி, வெற்றி, சரவணன், சுருளி, அன்பு, ராஜகோபால், அரவிந்த், அஸ்வின், குமார், பிரவீன், பொன்னுச்சாமி, ரமேஷ், அங்குசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக பங்கேற்றனர்.



